என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பள்ளி மாணவ மாணவியர்"
- ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள், ஓசூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்.
- மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள நடைமுறைகளை நேரில் பார்த்து பல்வேறு விளக்கங்களையும் கேட்டறிந்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜுஜுவாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள், ஓசூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்.
மாணவர்கள் வரலாற்று ஆய்வுகள் பற்றி அறிந்து கொள்ளும் விதமாக பழமை வாய்ந்த இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, கலாச்சாரங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு களப்பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில், மாநகராட்சி கல்விக் குழு தலைவர் ஸ்ரீதரன் ஏற்பாட்டின் பேரில், ஜுஜுவாடி அரசு மேல்நிலைப்பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் 50-க்கும் மேற்பட்டோர், மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள நடைமுறைகளை நேரில் பார்த்து பல்வேறு விளக்கங்களையும் கேட்டறிந்தனர்.
முன்னதாக மாணவ மாணவிகளை, மாநகராட்சி மேயர் எஸ் ஏ சத்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் வரவேற்று அவர்களுக்கு மாநகராட்சி செயல்பாடுகள் குறித்து விளக்கினார்கள்.
அப்போது, மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் மாதேஸ்வரன் மற்றும் ரவி, நாகராஜ் உள்ளிட்ட கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.
பின்னர், இது தொடர்பாக பள்ளி ஆசிரியை சுவர்ணா நிருபர்களிடம் கூறுகையில், குடிமையியல் பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு தேர்தல் நடத்துவது மற்றும் அது தொடர்பான பணிகள் குறித்து இடம்பெற்றுள்ளது.
இந்தப் பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து நேரிலும் பார்த்து அறிந்து கொள்ளும் விதமாக இந்த களப்பயணம் அமைந்தது என கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்